என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மேற்குவங்காளத்தில் பிரதமர் மோடி மேலும் 10 இடங்களில் பிரசாரம்
புதுடெல்லி:
மேற்கு வங்காளத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு ஏற்கனவே 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன. நாளை 3-வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
இது தவிர இன்னும் 5 கட்ட தேர்தல் இருக்கின்றன. இங்கு ஆளும் கட்சியாக மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் இருக்கின்ற நிலையில், ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற தீவிரத்துடன் பாரதிய ஜனதா களத்தில் உள்ளது.
இதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் மேற்கு வங்காளத்தில் அதிமுக்கிய கவனம் செலுத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
பிரதமர் மோடி 5 மாநிலங்களையும் சேர்த்து 25 இடங்களில் பிரசாரம் செய்துள்ளார். மேற்கு வங்காளத்தில் மட்டும் 9 பிரசாரங்களை இதுவரை முடித்துள்ளார். அந்த மாநிலத்தில் 20 பிரசார கூட்டம் வரை பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி முடிவு செய்திருந்தார். 9 கூட்டங்கள் முடிந்துள்ள நிலையில் மேலும் 10 கூட்டங்களில் அவர் பிரசாரம் செய்ய இருப்பதாக மேற்கு வங்க மேலிட பொறுப்பாளர் கைலாஷ் விஜய் வர்கியா தெரிவித்தார்.
அங்கு இறுதி கட்ட தேர்தல் 29-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் 27-ந் தேதியுடன் ஓய்கிறது. அதுவரை பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
அதேபோல பாரதிய ஜனதா தலைவர்களும் தொடர்ந்து முகாமிட்டு பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்