search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஷ்மி தாக்கரே
    X
    ராஷ்மி தாக்கரே

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட உத்தவ் தாக்கரே மனைவி மருத்துவமனையில் அனுமதி

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை அசுர வேகமெடுத்து உள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரத்தில் கொரோனாவின் 2-வது அலை அசுர வேகம் எடுத்துள்ள நிலையில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், சுற்றுலாத்துறை மந்திரியுமான ஆதித்ய தாக்கரேவுக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே, உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரேக்கு கடந்த 23-ம் தேதி தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் முதல் மந்திரியின் வர்ஷா பங்களாவில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்தார்.
     
    உத்தவ் தாக்கரேயும், அவரது மனைவி ராஷ்மி தாக்கரேயும் கடந்த 11-ம் தேதி மும்பை ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    இந்நிலையில், உத்தவ் தாக்கரே மனைவி ராஷ்மி தாக்கரே உடல் சோர்வு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×