search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகார்ஜுனகார்கே
    X
    மல்லிகார்ஜுனகார்கே

    அசாமில் காங்கிரசுக்கு அமோக வெற்றி கிடைக்கும் - மல்லிகார்ஜுனகார்கே கணிப்பு

    அசாமில் முதல்கட்ட தேர்தல் நிலவரப்படி காங்கிரஸ் அமோக வெற்றிபெறும் நிலையில் உள்ளது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

    கவுகாத்தி:

    அசாம் மாநில சட்டசபை தேர்தல் காங்கிரஸ் மேலிட பார்வையாளராக பாராளுமன்ற மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இருந்து வருகிறார்.

    அசாம் மாநிலத்தில் நேற்று முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-

    இங்கு முதல்கட்டமாக நடந்த 47 தொகுதிகளில் காங்கிரசுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்ததை காண முடிந்தது. இன்னும் 2 கட்ட தேர்தல்கள் இருக்கின்றன. இதிலும் இதே அளவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    எனவே இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெறும் நிலையில் உள்ளது.

    இங்கு நடைபெறும் பா.ஜனதா ஆட்சியில் மக்கள் மிகவும் வெறுப்படைந்து உள்ளனர். முதல்-அமைச்சருக்கு எதிராக அலை வீசுகிறது. பல எம்.எல்.ஏ.க்களால் தொகுதிக்கே செல்ல முடியவில்லை. மக்கள் விரட்டி அடிக்கிறார்கள். பா.ஜனதாவில் உள்ள 60 எம்.எல்.ஏ.க்களில் 11 பேருக்கு சீட்டு கொடுக்கவில்லை. அந்த அளவுக்கு ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    இந்த மாநிலத்தில் 15 ஆண்டுகள் தருண்கோகாய் ஆட்சி இருந்தது. அப்போது ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதை மக்கள் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். இப்போது நாங்கள் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறோம்.

    குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம். குடும்ப தலைவிகளுக்கு மாத ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.365 ஆக உயர்த்தப்படும். 5 லட்சம் பேருக்கு அரசு வேலை ஆகிய திட்டங்களை அறிவித்து இருக்கிறோம். இது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய சாதனயை இங்கு நிகழ்த்தப்போகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×