என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 வாரங்களுக்கு முன்னதாகவே முடிவடைந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
Byமாலை மலர்25 March 2021 11:38 AM GMT (Updated: 25 March 2021 11:38 AM GMT)
5 மாநில தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், முன்கூட்டியே கூட்டத்தொடரை முடிக்கும்படி பல்வேறு எம்பிக்கள் வலியுறுத்தினர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் விவாதம் நடைபெற்றது. ஏப்ரல் 8ம் தேதி வரை 2 அமர்வுகளாக கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரண்டாவது அமர்வு தொடங்கிய பின்னர், ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும், 5 மாநில தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாலும், முன்கூட்டியே கூட்டத்தொடரை முடிக்கும்படி பல்வேறு எம்பிக்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் சுமார் 2 மாத காலமாக நடைபெற்று வந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 வாரங்களுக்கு முன்னதாகவே இன்றுடன் நிறைவடைந்தது. பாராளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X