என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு: தானே மாவட்டத்தில் பள்ளிகள் மூடல்
Byமாலை மலர்24 Feb 2021 1:48 AM GMT (Updated: 24 Feb 2021 1:48 AM GMT)
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தானே மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகளை மூட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
தானே :
தானே மாவட்டத்தின் கிராமப்புறங்களில் அண்மையில் 5 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நர்வேக்கர் 10 மற்றும் 12-ம் வகுப்புகளை தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை நடைமுறையில் இருக்கும். இருப்பினும், பாடங்கள் ஆன்லைனில் நடத்தப்படுவது தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
இதுபற்றி மாவட்ட பொறுப்பு மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக தானே மாவட்டத்தில் உடனடியாக ஊடரங்கு விதிக்கப்படாது எனவும், இது தொடர்பான எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நோயை கட்டுப்படுத்த பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனால் மாவட்டத்தில் ஊரடங்கை தவிர்க்க முடியும் என்றும் மந்திரி கூறினார்.
தானே மாவட்டத்தின் கிராமப்புறங்களில் அண்மையில் 5 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நர்வேக்கர் 10 மற்றும் 12-ம் வகுப்புகளை தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை நடைமுறையில் இருக்கும். இருப்பினும், பாடங்கள் ஆன்லைனில் நடத்தப்படுவது தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
இதுபற்றி மாவட்ட பொறுப்பு மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக தானே மாவட்டத்தில் உடனடியாக ஊடரங்கு விதிக்கப்படாது எனவும், இது தொடர்பான எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நோயை கட்டுப்படுத்த பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனால் மாவட்டத்தில் ஊரடங்கை தவிர்க்க முடியும் என்றும் மந்திரி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X