என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி எல்லைகளில் இணையதள சேவை முடக்கம் நீட்டிப்பு - உள்துறை அமைச்சகம் நடவடிக்கை
Byமாலை மலர்1 Feb 2021 11:58 PM GMT (Updated: 1 Feb 2021 11:58 PM GMT)
இணையதள சேவை முடக்கம் டெல்லியின் சிங்கு, காஷிபூர், திக்ரி எல்லைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியின் பல்வேறு எல்லைகளில் 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். குடியரசு தினமான கடந்த 26-ந்தேதி டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது, பயங்கர வன்முறை உண்டானது.
இதனால் நிலவிய பதற்றமான சூழல் மற்றும் அசம்பாவிதங்களை தடுக்கும் நடவடிக்கையாக தற்காலிகமாக டெல்லியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.
பின்னர் 29-ந்தேதி இரவு 11 மணி முதல் 31-ந்தேதி இரவு 11 மணி வரை பொது அவசர நிலை, பொது பாதுகாப்பு சட்ட விதிகளின் கீழ் விவசாயிகள் போராடும் டெல்லியின் எல்லை பகுதிகளில் இணையதள சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியது.
இந்த நிலையில், இணையதள சேவை முடக்கம் டெல்லியின் சிங்கு, காஷிபூர், திக்ரி எல்லைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியின் பல்வேறு எல்லைகளில் 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். குடியரசு தினமான கடந்த 26-ந்தேதி டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது, பயங்கர வன்முறை உண்டானது.
இதனால் நிலவிய பதற்றமான சூழல் மற்றும் அசம்பாவிதங்களை தடுக்கும் நடவடிக்கையாக தற்காலிகமாக டெல்லியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.
பின்னர் 29-ந்தேதி இரவு 11 மணி முதல் 31-ந்தேதி இரவு 11 மணி வரை பொது அவசர நிலை, பொது பாதுகாப்பு சட்ட விதிகளின் கீழ் விவசாயிகள் போராடும் டெல்லியின் எல்லை பகுதிகளில் இணையதள சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியது.
இந்த நிலையில், இணையதள சேவை முடக்கம் டெல்லியின் சிங்கு, காஷிபூர், திக்ரி எல்லைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X