என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்முவில் சர்வதேச எல்லைப்பகுதியில் 150 மீட்டர் நீள சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
Byமாலை மலர்23 Jan 2021 7:13 PM GMT (Updated: 23 Jan 2021 7:13 PM GMT)
ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைப்பகுதியில் 150 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து உள்ளனர்.
ஜம்மு:
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கத்துவா நகரில் பன்சார் என்ற இடத்தில் அமைந்த சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் 150 மீட்டர் நீளம் மற்றும் 30 அடி ஆழம் கொண்ட சுரங்கப்பாதை ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஹெக்சாகாப்டர் ஒன்று இதே பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருந்ததும் தெரிய வந்தது.
கடந்த 2019-ம் ஆண்டு இந்த பகுதி வழியே கும்பல் ஒன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றது. எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்.
இந்த சுரங்கப்பாதையானது சம்பா, ஹிராநகர் மற்றும் கத்துவா பகுதியில் கடந்த 6 மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 4வது சுரங்கப்பாதையாகும்.
இதேபோல் ஜம்மு நகரில் மொத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 10-வது சுரங்கப்பாதை ஆகும் என்று எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X