என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரள லாட்டரியில் தமிழக வியாபாரிக்கு ரூ.12 கோடி பரிசு
Byமாலை மலர்19 Jan 2021 9:47 PM GMT (Updated: 20 Jan 2021 2:33 AM GMT)
கேரள லாட்டரியில் புத்தாண்டு பம்பர் லாட்டரி வாங்கியதில், விற்பனையாகாத சீட்டுக்கு தமிழக வியாபாரிக்கு ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது
திருவனந்தபுரம்:
கேரளாவில் அரசு சார்பில் கிறிஸ்துமஸ்-புத்தாண்டையொட்டி முதல் பரிசு ரூ.12 கோடி என்று அறிவிக்கப்பட்டு லாட்டரி விற்பனை நடந்து வந்தது. இதற்கிடையே கடந்த 17-ந் தேதி குலுக்கல் நடைபெற்றது. அப்போது கொல்லம் மாவட்டம் ஆரியங்காவில் விற்ற சீட்டுக்கு ரூ.12 கோடி கிடைத்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிர்ஷ்டசாலி யாரென்பது தெரியவில்லை.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் தென்காசியை சேர்ந்த ஷரபுதீன் என்பவர் அந்த லாட்டரி சீட்டை வைத்திருந்தது தெரிய வந்தது. அதாவது, கேரளாவில் லாட்டரி சீட்டு வாங்கி அதனை ஷரபுதீன் விற்று வந்ததாகவும், புத்தாண்டு பம்பர் லாட்டரி வாங்கியதில், விற்பனையாகாத சீட்டுக்கு பரிசு விழுந்ததும் தெரியவந்தது.
இதனை அறிந்த ஷரபுதீன் நேற்று திருவனந்தபுரம் சென்று, லாட்டரி சீட்டை ஒப்படைத்து அதற்கான அத்தாட்சி சான்றிதழை பெற்று கொண்டார். ரூ.12 கோடி பரிசு விழுந்த உற்சாகத்தில் ஷரபுதீன் கூறுகையில், லாட்டரி சீட்டு வாங்கும் போது எப்போதாவது விற்பனையாகாத சீட்டுக்கு சிறிய பரிசுகள் விழுந்துள்ளன. ஆனால் எனக்கு முதல் பரிசான ரூ.12 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இந்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்பதை தற்போது வரை சிந்திக்கவில்லை என்று கூறினார்.
கேரளாவில் அரசு சார்பில் கிறிஸ்துமஸ்-புத்தாண்டையொட்டி முதல் பரிசு ரூ.12 கோடி என்று அறிவிக்கப்பட்டு லாட்டரி விற்பனை நடந்து வந்தது. இதற்கிடையே கடந்த 17-ந் தேதி குலுக்கல் நடைபெற்றது. அப்போது கொல்லம் மாவட்டம் ஆரியங்காவில் விற்ற சீட்டுக்கு ரூ.12 கோடி கிடைத்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிர்ஷ்டசாலி யாரென்பது தெரியவில்லை.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் தென்காசியை சேர்ந்த ஷரபுதீன் என்பவர் அந்த லாட்டரி சீட்டை வைத்திருந்தது தெரிய வந்தது. அதாவது, கேரளாவில் லாட்டரி சீட்டு வாங்கி அதனை ஷரபுதீன் விற்று வந்ததாகவும், புத்தாண்டு பம்பர் லாட்டரி வாங்கியதில், விற்பனையாகாத சீட்டுக்கு பரிசு விழுந்ததும் தெரியவந்தது.
இதனை அறிந்த ஷரபுதீன் நேற்று திருவனந்தபுரம் சென்று, லாட்டரி சீட்டை ஒப்படைத்து அதற்கான அத்தாட்சி சான்றிதழை பெற்று கொண்டார். ரூ.12 கோடி பரிசு விழுந்த உற்சாகத்தில் ஷரபுதீன் கூறுகையில், லாட்டரி சீட்டு வாங்கும் போது எப்போதாவது விற்பனையாகாத சீட்டுக்கு சிறிய பரிசுகள் விழுந்துள்ளன. ஆனால் எனக்கு முதல் பரிசான ரூ.12 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இந்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்பதை தற்போது வரை சிந்திக்கவில்லை என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X