search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி(கோப்பு படம்)
    X
    பிரதமர் மோடி(கோப்பு படம்)

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது - பிரதமர் மோடி

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய மருத்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்தது.

    சீரம் நிறுவனத்திடம் இருந்து கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை  ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலையில் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
       
    இதையடுத்து, நாடு முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள ஊழியர்களான போலீசார், பாதுகாப்பு படையினர் என மொத்தம் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட உள்ளது.

    இதற்காக, அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி வினியோக நடைமுறைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்பாக மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    * முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள ஊழியர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூ போடப்பட உள்ளது.

    * இந்த பட்டியலில் அரசியல்வாதிகள் இடம்பெறவில்லை.

    * கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது.

    * தங்களுக்கான முறை வரும்போது அரசியல்வாதிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    என்றார்.
    Next Story
    ×