என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் 15-ந் தேதி நாடு தழுவிய போராட்டம்
Byமாலை மலர்9 Jan 2021 11:52 PM GMT (Updated: 9 Jan 2021 11:52 PM GMT)
விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசுடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன.
இவ்வாறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் கட்சியும் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சி, நாட்டின் விவசாயிகளுடன் நிற்க கடமைப்பட்டு உள்ளது. எனவே வரும் 15-ம் தேதியை விவசாயிகள் அதிகார தினமாக காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது. அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைநகரங்களில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். அத்துடன் இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் தர்ணாவும் நடைபெறும்’ என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X