என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘உயிரிழப்போம் அல்லது வெற்றிபெறுவோம்’ - பதாகையுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விவசாய சங்கத்தினர்
Byமாலை மலர்8 Jan 2021 12:30 PM GMT (Updated: 8 Jan 2021 12:30 PM GMT)
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையின் போது ‘நாங்கள் உயிரிழப்போம் அல்லது வெற்றிபெறுவோம் என்ற பதாகையுடன் விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் இன்று 44-வது நாளை எட்டியுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கங்கள் இடையே இன்று 8-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் போது விவசாய சங்க தலைவர்கள் ‘நாங்கள் உயிரிழப்போம் அல்லது வெற்றிபெறுவோம்’ என்ற பதாகையுடன் பங்கேற்றனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறப்போவதில்லை என மத்திய அரசும் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என விவசாய சங்கங்களும் உறுதியாக இருந்ததால் இன்று நடைபெற்ற 8-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தரப்புக்கும் இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X