என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு- புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு
Byமாலை மலர்23 Dec 2020 8:15 AM GMT (Updated: 23 Dec 2020 8:15 AM GMT)
கர்நாடகாவில் இரவுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக முதல்வர்எடியூரப்பா அறிவித்தார். இரவு 10 முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று கூறினார். இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மாநிலத்திற்கு வரும் சர்வதேச பயணிகளையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறினார்.
பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருதால் இந்தியா பல்வேறு நாடுகள், பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. ஆனால், ஏற்கனவே இந்தியா வந்தவர்களில் சிலருக்கு இந்த புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X