என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சபரிமலையில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடு
Byமாலை மலர்10 Dec 2020 2:16 AM GMT (Updated: 10 Dec 2020 2:16 AM GMT)
சபரிமலையில் பணியாற்றுபவர்கள் 2 வாரங்களுக்கொருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை :
சபரிமலையில் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அங்கு பணியாற்றுபவர்களுக்கு மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார், அர்ச்சகர்கள் மற்றும் ஓட்டல்கள், நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட அனைவரும் 14 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
கொரோனா இல்லை என்பதற்கான நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்கள் உடனடியாக சபரிமலை பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அவ்வப்போது கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வசதியாக சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. கேரளாவை சேர்ந்த அனைவருக்கும் இலவசமாகவும், மற்ற மாநில தொழிலாளர்களுக்கு ரூ. 625 கட்டணத்திலும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X