என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து - கனடாவுக்கு இந்தியா எச்சரிக்கை
Byமாலை மலர்4 Dec 2020 1:43 PM GMT (Updated: 4 Dec 2020 1:43 PM GMT)
டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக விவசாய குழுக்கள் மத்திய அரசு இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கடந்த 1-ம் தேதி கருத்து தெரிவித்திருந்த ட்ரூடோ, ‘
இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்.
உரிமைகளை பாதுகாக்க அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களுக்கு கனடா எப்போதும் ஆதரவு அளிக்கும். என தெரிவித்திருந்தார். மேலும், கனடாவில் உள்ள் இந்திய தூதரகத்தில்
போராட்டங்களும் நடைபெற்றது.
இதனையடுத்து, கனடா பிரதமரின் கருத்துக்கும், தூதரகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கும் இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர் ட்ரூடோ தெரித்த கருத்துக்கு இந்திய அரசு முறைப்படி தூதரகம் வழியாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள கனடா தூதரை அழைத்து மத்திய அரசு தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளது. மேலும், கனடா பிரதமரின் இதுபோன்ற கருத்துக்கள் இரு நாட்டு உறவையும் மிகக்கடுமையாக பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா நாட்டு தலைவர்கள் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும், கனடா தலைவர்கள் இது போன்ற கருத்துக்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தால் இருநாட்டு உறவிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X