என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரம்: லாலு பிரசாத் யாதவ் மீது வழக்கு பதிவு
Byமாலை மலர்27 Nov 2020 2:42 AM GMT
சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு தொடர்பாக பா.ஜ.க. எம்எல்ஏ ஒருவருடன் பேரம் பேசும் செல்போன் உரையாடல் விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாட்னா :
பீகாரில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் மாநில முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு தொடர்பாக பா.ஜ.க. எம்எல்ஏ ஒருவருடன் பேரம் பேசும் செல்போன் உரையாடல் பதிவு பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிர்பைன்டி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. லலன் குமாரிடம் “சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்படும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தால் விரைவில் எங்களுடைய ஆட்சி அமைந்தவுடன், இதற்கான பிரதிபலன் அளிக்கப்படும்“ இன்று லாலு பிரசாத் பேசுவதாக அந்த உரையாடல் அமைந்துள்ளது.
பா.ஜ.க. மாநில தலைவா?களில் ஒருவரும் முன்னாள் துணை முதல்வருமான சுஷீல் குமார் மோடி, இந்த உரையாடல் பதிவை நேற்று முன்தினம் டுவிட்டரில் வெளியிட்டார்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பா.ஜ.க. லலன் குமார் லாலு பிரசாத் யாதவ் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X