என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகார் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற நிதிஷ்குமாருக்கு சிராக் பஸ்வான் வாழ்த்து
Byமாலை மலர்16 Nov 2020 10:51 PM GMT (Updated: 16 Nov 2020 10:51 PM GMT)
மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள நிதிஷ்குமாரை நான் வாழ்த்துகிறேன் என சிராக் பஸ்வான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாட்னா:
பீகாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டது. நிதிஷ்குமாரை தோற்கடிப்பதே தங்கள் நோக்கம் என்று கூறிய அக்கட்சி, தேர்தல் முடிவுகள் வெளியானபோது ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனாலும் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள வேட்பாளர்களின் வெற்றியைத் தடுத்தது. ஆனாலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியால், நிதிஷ்குமார் 7-வது முறையாக பீகார் முதல்-மந்திரியாக நேற்று பதவியேற்றார்.
இந்நிலையில் சிராக் பஸ்வான் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள நிதிஷ்குமாரை நான் வாழ்த்துகிறேன். இந்த அரசு இதன் முழு பதவிக்காலத்தை பூர்த்திசெய்யும் என்றும், நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-மந்திரியாக நீடிப்பார் என்றும் நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அதனுடன் தனது கட்சியின் தேர்தல் அறிக்கைக்கான இணைப்பையும் வெளியிட்டுள்ள சிராக் பஸ்வான், அதில் உள்ள சில வாக்குறுதிகளை நிதிஷ்குமார் நிறைவேற்றுவார் என்று கருதுவதாக கூறியுள்ளார்.
பீகாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டது. நிதிஷ்குமாரை தோற்கடிப்பதே தங்கள் நோக்கம் என்று கூறிய அக்கட்சி, தேர்தல் முடிவுகள் வெளியானபோது ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனாலும் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள வேட்பாளர்களின் வெற்றியைத் தடுத்தது. ஆனாலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியால், நிதிஷ்குமார் 7-வது முறையாக பீகார் முதல்-மந்திரியாக நேற்று பதவியேற்றார்.
இந்நிலையில் சிராக் பஸ்வான் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள நிதிஷ்குமாரை நான் வாழ்த்துகிறேன். இந்த அரசு இதன் முழு பதவிக்காலத்தை பூர்த்திசெய்யும் என்றும், நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-மந்திரியாக நீடிப்பார் என்றும் நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அதனுடன் தனது கட்சியின் தேர்தல் அறிக்கைக்கான இணைப்பையும் வெளியிட்டுள்ள சிராக் பஸ்வான், அதில் உள்ள சில வாக்குறுதிகளை நிதிஷ்குமார் நிறைவேற்றுவார் என்று கருதுவதாக கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X