என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய ராணுவம் பதிலடியில் பலியான பாகிஸ்தானிய வீரர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு
Byமாலை மலர்13 Nov 2020 5:48 PM GMT (Updated: 13 Nov 2020 5:48 PM GMT)
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் பலியான பாகிஸ்தானிய வீரர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு:
ஜம்மு மற்றும் காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைகள் மற்றும் நிலைகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பூஞ்ச், கெரான் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.
ஜம்மு காஷ்மீரின் இருவேறு பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். உரி எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடந்த பதிலடியில் பலியான பாகிஸ்தானிய வீரர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், காயமடைந்த பாகிஸ்தானிய வீரர்களின் எண்ணிக்கையும் 16 ஆக உயர்ந்துள்ளது என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் காயமடைந்த இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இந்திய ராணுவத்தினரின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆனது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X