என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிரா அரசு அனைத்து முனைகளிலும் தோல்வி அடைந்து விட்டது: சந்திரகாந்த் பாட்டீல்
Byமாலை மலர்10 Nov 2020 3:16 AM GMT (Updated: 10 Nov 2020 3:16 AM GMT)
மகாராஷ்டிரா அரசு அனைத்து முனைகளிலும் தோல்வி அடைந்துவிட்டதாக மாநில பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் குற்றம் சாட்டி உள்ளார்.
அவுரங்காபாத் :
பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நேற்று அளித்த பேட்டியில் ஆளும் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகம் கடந்த சில மாதங்களாக சம்பளத்தொகையை வழங்காததால் 2 ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
அதுமட்டும் இன்றி ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த 28 முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டனர்.
கொங்கன் பகுதியை தாக் கிய சிசர்கா புயல் மற்றும் கனமழை காரணமாக விதர்பா மற்றும் மரத்வாடா பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விளைபயிர்களை இழந்துள்ளனர். இதனால் கடும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ள அவர்களுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு நிவாரணம் வழங்க தவறிவிட்டது.
இப்படி அரசு அனைத்து முனைகளிலும் தொடர்ந்து தோல்வியடைந்து உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை துடைக்க ஆளும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இல்லையெனில் நிலைமைய சீராக்க பாரதீய ஜனதாவினர் வீதியில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நேற்று அளித்த பேட்டியில் ஆளும் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகம் கடந்த சில மாதங்களாக சம்பளத்தொகையை வழங்காததால் 2 ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
அதுமட்டும் இன்றி ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த 28 முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டனர்.
கொங்கன் பகுதியை தாக் கிய சிசர்கா புயல் மற்றும் கனமழை காரணமாக விதர்பா மற்றும் மரத்வாடா பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விளைபயிர்களை இழந்துள்ளனர். இதனால் கடும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ள அவர்களுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு நிவாரணம் வழங்க தவறிவிட்டது.
இப்படி அரசு அனைத்து முனைகளிலும் தொடர்ந்து தோல்வியடைந்து உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை துடைக்க ஆளும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இல்லையெனில் நிலைமைய சீராக்க பாரதீய ஜனதாவினர் வீதியில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X