search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரகாந்த் பாட்டீல்"

    • அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு.
    • அமைச்சர் மீதான மைவீச்சு தாக்குதலை கண்டித்து பாஜகவினர் போராட்டம்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சராக இருக்கும் சந்திரகாந்த் பாட்டீல், நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் சட்டமேதை அம்பேத்கர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி மகாத்மா பூலே ஆகியோர் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கு அரசு மானியம் கோரவில்லை என்று தெரிவித்திருந்தார். தமது பேச்சின்போது பிச்சை என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியது சர்ச்சையானது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புனே மாவட்டம் பிம்பிரி பகுதியில் அமைச்சர் மீது ஒருவர், கருப்பு மையை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் மீதான மைவீச்சு தாக்குதலை கண்டித்து மகாராஷ்டிரா பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஒருவர் போராட்டக்காரர்களைக் கொண்டு தன் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தக் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் பாதுகாப்பு பணியில் குறைபாடு ஏற்பட்டதாக கூறி 3 அதிகாரிகள் உள்பட 10 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புனே காவல்துறை அதிகாரி அங்குஷ் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    • புனே நகரில் பெய்த கனமழையால் மக்கள் நரக வேதனை அனுபவித்தனர்.
    • இதற்காக புனே மக்களிடம் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மன்னிப்பு கோரியுள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இரு தினங்களுக்கு முன்பு இடைவிடாமல் 5 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.

    இந்த மழையால் புனே நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. புனே மாவட்டத்திலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. குறிப்பாக புனே நகரில் உள்ள மகர்பாடா பகுதியில் 11.6 செ.மீ. மழையும், சிவாஜிநகர் பகுதியில் 10.4 செ.மீ. மழையும் பெய்தது. புனே நகர மக்களுக்கு இந்த மழை நரக வேதனையை கொடுத்தது.

    இந்நிலையில், புனே மாவட்ட பொறுப்பு மந்திரியான சந்திரகாந்த் பாட்டீல் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், புனே நகர் மற்றும் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மக்கள் பட்ட வேதனைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக விரிவான திட்டம் தயாரிக்கப்படும் என தெரிவித்தார்.

    • ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வுகாத்தியில் முகாமிட்டு உள்ளார்.
    • ஏக்நாத் ஷிண்டேவின் முடிவுக்கு பின்னணியில் பாஜக இருப்பதாக சரத்பவார் கூறியிருந்தார்.

    மும்பை :

    சிவசேனாவை சேர்ந்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். ஏக்நாத் ஷிண்டேவின் முடிவுக்கு பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பேசுகையில், சக்திவாய்ந்த தேசிய கட்சி ஆதரவு தனக்கு இருப்பதாக கூறினார். இதற்கிடையே சிவசேனாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும், பாஜனதாவுக்கும் தொடர்பில்லை என அந்த கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "மகாவிகாஸ் அகாடி அல்லது சிவசேனா கட்சிக்குள் நடக்கும் பிரச்சினைகளுக்கும் பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேற்று முன்தினம் மதியம் மும்பையில் நான் தேவேந்திர பட்னாவிசுடன் மதிய உணவு சாப்பிட்டேன். அதன் பிறகு அவர் சில வேலை காரணமாக டெல்லி சென்றுவிட்டார்" என்றார்.

    இதேபோல பா.ஜனதா மும்பை நிர்வாகி மோகித் கம்போஜ் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அசாமில் இருப்பது குறித்து கேட்ட போது, மோகித் கம்போஜிக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் உள்ளனர், எனவே சிலருக்கு உதவி செய்ய அவர் அங்கு சென்று இருக்கலாம் என்றார்.

    ×