search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    மராட்டியத்தில் இன்று மேலும் 58 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

    மராட்டியத்தில் மேலும் 58 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
    மும்பை:

    நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மராட்டியத்தில் தான் அதிக அளவு காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மராட்டியத்தில் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 

    இந்நிலையில், மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 58 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,589 ஆக உயர்ந்துள்ளது. 

    இந்த ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 284 ஆக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 24,919 காவலர்கள் கொரோனா நோய்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 1,386 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×