என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பி.எஸ்.என்.எல். சேவையைத்தான் பயன்படுத்த வேண்டும் - மத்திய அரசு உத்தரவு
Byமாலை மலர்14 Oct 2020 10:00 PM GMT (Updated: 14 Oct 2020 10:00 PM GMT)
அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பி.எஸ்.என்.எல். சேவையைத்தான் பயன்படுத்த வேண்டும் என மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி:
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்), எம்.டி.என்.எல். (மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட்) ஆகியவை தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் நஷ்டத்தை சந்தித்து உள்ளன. இந்த நிலையில் அந்த நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அனைத்து மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் அகண்ட அலைவரிசை இணைப்பு, இணைய இணைப்பு மற்றும் குத்தகை அடிப்படையிலான இணைப்புகளை மேற்கண்ட பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்தே பெற வேண்டும் என்று, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்துடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்), எம்.டி.என்.எல். (மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட்) ஆகியவை தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் நஷ்டத்தை சந்தித்து உள்ளன. இந்த நிலையில் அந்த நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அனைத்து மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் அகண்ட அலைவரிசை இணைப்பு, இணைய இணைப்பு மற்றும் குத்தகை அடிப்படையிலான இணைப்புகளை மேற்கண்ட பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்தே பெற வேண்டும் என்று, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்துடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X