search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 63 லட்சத்தை தாண்டியது- 83.5 சதவீத நோயாளிகள் குணமடைந்தனர்

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 63 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 98,678 பேர் உயிரிழந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 63,12,585 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86,821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,181 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98,678 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 52,73,202 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 85376 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

    நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,40,705 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.56 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 83.53 சதவீதமாகவும் உள்ளது.


    Next Story
    ×