என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூருவில் 4 தனியார் மருத்துவமனைகள் மீது கிரிமினல் வழக்கு
Byமாலை மலர்25 Sep 2020 8:42 AM GMT (Updated: 25 Sep 2020 8:42 AM GMT)
பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு 50 சதவீத படுக்கைகள் ஒதுக்கப்படாதது தொடர்பாக 4 தனியார் மருத்துவமனைகள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெங்களூருவில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள் ஒதுக்க முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனை பிரதிநிதிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா நடத்திய ஆலோசனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 50 சதவீத படுக்கைகளை ஒதுக்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அதன்படி தனியார் மருத்துவமனைகள் நடந்து கொள்ளவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு 50 சதவீத படுக்கைகள் ஒதுக்காவிட்டால் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது.
ஆனாலும் இந்த எச்சரிக்கையை தனியார் மருத்துவமனைகள் கண்டுகொள்ளவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகளையும் ஒதுக்கவில்லை. இதையடுத்து பெங்களூருவில் உள்ள 17 மருத்துவமனைகளின் உரிமத்தை மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்தனர்.
பெங்களூரு பன்னரகட்டா சாலை, பத்மநாபநகர், லங்போர்டு கார்டனில் உள்ள மருத்துவமனை, மில்லர்ஸ் சாலையில் உள்ள ஆஸ்பத்திரி ஆகிய 4 மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு 50 சதவீத படுக்கைகள் ஒதுக்கப்படாமல் இருந்தது மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த 4 தனியார் மருத்துவமனைகள் மீதும் 2005-ம் ஆண்டு பேரிடர் மேலாண்மை சட்டம் பிரிவு 51, 52, 58 ஆகிய பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உத்தரவிட்டு உள்ளார்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெங்களூருவில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள் ஒதுக்க முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனை பிரதிநிதிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா நடத்திய ஆலோசனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 50 சதவீத படுக்கைகளை ஒதுக்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அதன்படி தனியார் மருத்துவமனைகள் நடந்து கொள்ளவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு 50 சதவீத படுக்கைகள் ஒதுக்காவிட்டால் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது.
ஆனாலும் இந்த எச்சரிக்கையை தனியார் மருத்துவமனைகள் கண்டுகொள்ளவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகளையும் ஒதுக்கவில்லை. இதையடுத்து பெங்களூருவில் உள்ள 17 மருத்துவமனைகளின் உரிமத்தை மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்தனர்.
பெங்களூரு பன்னரகட்டா சாலை, பத்மநாபநகர், லங்போர்டு கார்டனில் உள்ள மருத்துவமனை, மில்லர்ஸ் சாலையில் உள்ள ஆஸ்பத்திரி ஆகிய 4 மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு 50 சதவீத படுக்கைகள் ஒதுக்கப்படாமல் இருந்தது மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த 4 தனியார் மருத்துவமனைகள் மீதும் 2005-ம் ஆண்டு பேரிடர் மேலாண்மை சட்டம் பிரிவு 51, 52, 58 ஆகிய பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உத்தரவிட்டு உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X