என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் மேலும் 161 போலீசாருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்24 Sep 2020 12:38 PM GMT (Updated: 24 Sep 2020 12:38 PM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 161 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புடன் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது.
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் நின்று பணியாற்றும் துறைகளில் ஒன்றான காவல்துறையைச் சேர்ந்தவர்களும் தப்பவில்லை.
இந்நிலையில், அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை நெருங்குகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புடன் ஒரு போலீஸ் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 235 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 3 ஆயிரத்து 381 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து 18 ஆயிரத்து 372 போலீசார் குணம் அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X