என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரள விவசாய மந்திரி சுனில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி
Byமாலை மலர்23 Sep 2020 10:13 AM GMT (Updated: 23 Sep 2020 10:13 AM GMT)
கேரள மாநிலத்தின் விவசாயத்துறை மந்திரியான சுனில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நேற்று 4,125 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 19 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பலியானோர் எண்ணிக்கை 572 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 40,382 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
இந்நிலையில், கேரள மாநிலத்தின் விவசாயத் துறை மந்திரியாக பதவி வகித்து வரும் சுனில் குமாருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்றுக்கு ஆளாகும் மூன்றாவது மந்திரி சுனில் குமார். ஏற்கனவே, நிதி மந்திரி தாமஸ் மற்றும் தொழில்துறை மந்திரி ஜெயராஜன் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X