என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
Byமாலை மலர்22 Sep 2020 5:27 AM GMT (Updated: 22 Sep 2020 5:27 AM GMT)
எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
புதுடெல்லி:
மாநிலங்களவை இன்று கூடியதும் அவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:
8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழே தனியார் கொள்முதல் செய்ய முடியாது என்ற மற்றொரு மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படும் வரை எதிர்க்கட்சிகள் நடப்பு கூட்டத்தொடரை புறக்கணிக்கும் என தெரிவித்தார்.
அதன்பின் பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உரிமை உள்ளது. எம்.பி.க்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையானது அவர்களின் செயலுக்கு எதிரானதே தவிர அவர்களுக்கு எதிரானது அல்ல என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களின் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X