search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆந்திரா மாநிலத்தில் ஒரே நாளில் 6,235 பேருக்கு கொரோனா தொற்று - 51 பேர் பலி

    ஆந்திரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,235 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
    ஆந்திரா மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 6,235  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,31,749 ஆக அதிகரித்துள்ளது.
     
    இன்று ஒரே நாளில் 51 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,410  ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது மாநிலம் முழுவதும் 74,518 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனா தொற்றிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 10,502 பேர் இதுவரை குணமடைந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து  5,51,821 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    Next Story
    ×