search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தனக்கு கொரோனா இருப்பதாகவும், உயிர்பிழைக்கமாட்டேன் என மனைவியிடம் கூறிக்கொண்டு கள்ளக்காதலியுடன் வேறுமாநிலம் சென்று குடித்தனம் நடத்திய நபர்

    தனக்கு கொரோனா இருப்பதாகவும் தான் உயிர்பிழைக்கமாட்டேன் என மனைவியிடம் கூறிக்கொண்டு கள்ளக்காதலியுடன் வேறு மாநிலத்திம் சென்று குடித்தனம் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மனீஷ் மிஸ்ரா. திருமணமான இவர் தனது மனைவியுடன் நவி மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டார்.   

    மனைவியிடம் பேசிய மிஸ்ரா தனக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும், தான் உயிர் பிழைக்கமாட்டேன் எனவும் கூறி உடனடியாக இணைப்பை துண்டித்துள்ளார். 

    இதனால் பதற்றம் அடைந்த மிஸ்ராவின் மனைவி தனது கணவரின் செல்போனுக்கு உடனடியாக மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், மிஸ்ராவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது. அதன் பின் மிஸ்ரா தனது வீட்டிற்கு வரவே இல்லை.

    இதனால் பதற்றம் அடைந்த மிஸ்ராவின் மனைவி தனது கணவரை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் மிஸ்ராவின் செல்போன் சிக்னல் கடைசியாக கிடைத்த பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு மிஸ்ராவின் பைக், ஹெல்மெட் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 

    இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மிஸ்ரா வேறு ஒரு பெண்ணுடன் ஒரு காரில் பயணம் மேற்கொண்ட காட்சி அதில் பதிவாகியிருந்தது.

    இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் மிஸ்ரா மத்திய பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டதை போலீசார் கண்டுபிடித்தனர். 

    இதையடுத்து அவரை பிடிப்பதற்காக மும்பை போலீசார் மத்திய பிரதேசம் விரைந்தனர். அங்கு இந்தூரில் மிஸ்ரா வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திவந்ததை போலீசார் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக, மிஸ்ராவையும், அந்த பெண்ணையும் மும்பை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மிஸ்ராவுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததும் அவர்கள் இருவரும் தனியாக குடும்பம் நடத்த விரும்பியதும் தெரியவந்தது.

    இதற்காக திட்டம் தீட்டிய மிஸ்ரா தனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், தான் உயிர்பிழைக்கமாட்டேன் அதனால் தற்கொலை செய்யப்போவதாகவும்
    கூறிக்கொண்டு தனது கள்ளக்காதலியுடன் இணைந்து மத்தியபிரதேசம் சென்றுள்ளார். அங்கு யாருக்கும் தெரியாமல் தனது கள்ளக்காதலியுடன் தனியாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. 

    இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×