என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
4 கிறிஸ்தவ அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற தடை - மத்திய அரசு நடவடிக்கை
புதுடெல்லி:
இந்தியாவில் செயல்படும் பல அரசு சாரா சமூக அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளை பெற்று வருகின்றன.
இதன்படி 22 ஆயிரத்து 457 சமூக அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற்று வந்தன. இவ்வாறு செயல்படும் சமூக அமைப்புகள் எந்த வித லாப நோக்கத்துடனும் செயல்பட கூடாது. சமூக உதவிகளை செய்ய வேண்டும் என்ற விதிகள் உள்ளன.
அதை மீறி செயல்பட்ட 20 ஆயிரத்து 674 சமூக அமைப்புகள் வெளி நாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.
வெளிநாட்டில் இருந்து நிதி பெற வேண்டும் என்றால் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு சட்டப்படி அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிதான் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இப்போது மேலும் 6 அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் 4 அமைப்புகள் கிறிஸ்தவ மதம் சார்ந்தவை ஆகும்.
இதன்படி ஜார்கண்டில் செயல்பட்ட காஸ்னர் இவாஞ்சலிக்கல், மணிப்பூர் இவாஞ்சலிக்கல், ஜார்கண்ட் வடக்கு இவாஞ்சலிக்கல் லுத்தரன் சர்ச், மும்பை நியூ லைப் பெல்லோஷிப் ஆகிய கிறிஸ்தவ அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது மட்டும் அல்லாமல் வேறு சில கிறிஸ்தவ அமைப்புகள் தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
செவன்டே அட்வென் டிஸ்ட், பாப்டிஸ் சர்ச் போன்றவை குறித்தும் புகார்கள் வந்துள்ளன.
அதுபற்றியும் விசாரணை நடந்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்