என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்தியா தகுந்த பதிலடி
Byமாலை மலர்31 Aug 2020 5:27 PM GMT (Updated: 31 Aug 2020 5:27 PM GMT)
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லையில் தாக்குதல்கள் நடைபெறாத வகையில் போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனாவால் இரு நாடுகளும் பாதிக்கப்பட்ட சூழலிலும், பாகிஸ்தான் ராணுவ தரப்பில் இருந்து அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்திய நிலைகளை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்களில் இந்திய வீரர்கள் தவிர்த்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட பொதுமக்களும் பலியாகி வருகின்றனர். இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் இருந்தும் பதிலடி தரப்பட்டு வருகிறது. ஆனாலும், பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டாரில் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இன்று இரவு 9.15 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது.
பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X