search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்"

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். #civiliansinjured #Pakfiring #LoCfiring
    ஸ்ரீநகர்:

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவம் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகளின்மீது அத்துமீறலாக துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.

    இந்நிலையில், பாரமுல்லா மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருபெண் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #civiliansinjured #Pakfiring #LoCfiring 
    காஷ்மீரில் உள்ள எல்லைப்பகுதியில் இன்று பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு படை உதவி ‘கமான்டன்ட்’ வினய் பிரசாத் வீர மரணமடைந்தார். #Pakistanviolates #ceasefire #jawankilled #Hiranagarsector
    ஜம்மு: 
     
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

    அவ்வகையில், கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த ‘கமான்டன்ட்’ வினய் பிரசாத் வீர மரணமடைந்தார். #Pakistanviolates #ceasefire #jawankilled # Hiranagarsector
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் இன்று பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எல்லையோர கிராமத்தில் வசித்தவர் உயிரிழந்தார். #Civiliankilled #Pakfiring #RajouriLoC
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தை ஒட்டியுள்ள நவ்ஷேரா எல்லைக்கோட்டுப் பகுதி அருகேயுள்ள இந்திய கண்காணிப்பு சாவடிமீது இன்று பகல் 12 மணியளவில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். 

    இந்த தாக்குதலில் அருகாமையில் உள்ள இந்தியப்பகுதியான டீயிங் என்ற கிராமத்தை சேர்ந்த போத்ராஜ் என்பவரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. உடனடியாக அருகாமையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

    எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி போத்ராஜ் உயிரிழந்தார். பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடியாக இந்திய வீரர்களும் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தனர். #Civiliankilled #Pakfiring #RajouriLoC 
    காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் இன்று அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த இரு ராணுவ அதிகாரிகள் வீரமரணம் அடைந்தனர். #Armyofficerskilled #Pakistanviolates #Kupwaraceasefire
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் , குப்வாரா மாவட்டத்தை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் இன்று பகல் சுமார் 12 மணியளவில்  இந்திய நிலைகளின்மீது துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்திய வீரர்களும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒரு இளநிலை அதிகாரி வீரமரணம் அடைந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒரு இளநிலை அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இன்றைய தாக்குதலில் பலி எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. #Armyofficerskilled  #Pakistanviolates #Kupwaraceasefire 
    காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் உயிரிழந்தார். #Porterkilled #ceasefire #Pakistanisniper
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேரா செக்டர் பகுதியில் உள்ள கலால் என்னுமிடத்தில் உள்ள இந்திய கண்காணிப்பு கோபுரங்கள் மீது இன்று பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்திய படையினரும் ஆவேசமாக பதில்  தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையில் சில நிமிடங்கள் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் கோசாவி கேஷவ் சோம்கீர்
    உயிரிழந்தார்.

    முன்னதாக, இதே ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் வருண் கட்டால் என்ற இந்திய வீரர் உயிரிழந்தார்.

    நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஜம்மு மாவட்டத்தில் உள்ள பர்க்வால் எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டுசென்று சேர்க்கும் போர்ட்டராக பணியாற்றிய  தீபக் குமார் உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம். #Porterkilled #ceasefire #Pakistanisniper
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து நடத்திவரும் அத்துமீறிய தாக்குதலுக்கு பயந்து எல்லையோரத்தில் வசித்த சுமார் 76 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர். #Pakistanshelling

    ஜம்மு:

    காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

    கடந்த ஒரு வார காலமாக பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறப்பு போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்லன்வாலா செக்டாரில், பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில், வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த 8 மாத ஆண் குழந்தை பலியானது.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா-ஜம்மு செக்டாரில் இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். மேலும் ஆர்.எஸ்.பொரா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன.  



    அதைத்தொடர்ந்து ஆனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பேஹரா பகுதியில் இன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனத்தை மீது சிலர் குண்டுவீசி தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்கள் வீசிய குண்டு எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மக்கள் கூட்டத்தில் விழுந்து வெடித்தது. இந்த தாக்குதல்களில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்த்தோடு பலர் காயமடைந்திருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திவரும் அத்துமீறிய தாக்குதலுக்கு பயந்து எல்லையோரத்தில் உள்ள 100 கிராமங்களை சேர்ந்த சுமார் 76 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர். குறிப்பாக ஆர்னியா பகுதியில் இருந்து மட்டும் சுமார் 18,500 பேர் வெளியேறியுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள கிராமங்கள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. #Pakistanshelling
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா-ஜம்மு செக்டாரில் இன்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #JammuKashmir #PakistanRangers #KathuaAttack

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

    கடந்த ஒரு வார காலமாக பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது. இப்படி கடந்த 15-ந் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் 2 பேர், பொதுமக்களில் 4 பேர் உயிர் இழந்து உள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்திருக்கிறார்கள்.

    நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறப்பு போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்லன்வாலா செக்டாரில், பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில், வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த 8 மாத ஆண் குழந்தை பலியானது.

    இந்நிலையில், தொடர்ந்து 9-வது நாளாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா-ஜம்மு செக்டாரில் இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஆர்.எஸ்.பொரா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன.  #JammuKashmir #PakistanRangers #KathuaAttack
    ஜம்மு காஷ்மீரில் ஜம்மு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆர்.எஸ்.பொரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பி.எஸ்.எப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். #PakistanArmyViolates

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆர்.எஸ்.பொரா செக்டாரில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 

    இந்த தாக்குதலுக்கு இந்திய படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். ஆனாலும், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பி.எஸ்.எப். வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் சம்பா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பி.எஸ்.எப். வீரர் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது. #PakistanArmyViolates
    ×