என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா சவாலை எதிர்கொள்ள சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை
Byமாலை மலர்14 Aug 2020 2:37 PM GMT (Updated: 14 Aug 2020 2:37 PM GMT)
கொரோனா சவாலை எதிர்கொள்ள சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை அரசு எடுத்துள்ளது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார்.
டெல்லி:
74-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதில் கூறியதாவது,
கொரோனா சவாலை எதிர்கொள்ள சரியான நேரத்தில் சரியான நடவடிக்க அரசு எடுத்துள்ளது . கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த முன்களப் பணியாளர்களுக்கும் தலை வணங்குகிறேன்.
கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகள் ஒருங்கிணைந்து போராடி வருகின்றனர். கொரோனாவின் பரவல் வேகத்தை கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி அடைந்திருக்கிறோம். கொரோனா காலத்தில் பிரதமரின் கரீ ப் கல்யான் திட்டம் ஏழைகளுக்கு உதவியாக இருந்தது. ஏழை மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கொரோனா பாதிப்பு காரணமாக 2020 ஆம் ஆண்டில் நாம் பல பாடங்களை கற்றுக்கொண்டிருக்கிறோம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வாழ்க்கை வாழ்வாதாரத்தை காப்பதில் கவனம் செலுத்துவது அவசியம் என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X