என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிர சிறைச்சாலைகளில் 1,000 கைதிகளுக்கு கொரோனா
Byமாலை மலர்13 Aug 2020 10:05 PM GMT (Updated: 13 Aug 2020 10:05 PM GMT)
மகாராஷ்டிராவில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் இதுவரை 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மும்பை:
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
இதற்கிடையில், அம்மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கொரோனா பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த தகவல்களை மாநில சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மகாராஷ்டிராவில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் இதுவரை 1,000 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும். சிறைச்சாலைகளில் பணியாற்றிவரும் அதிகாரிகளில் 292 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.
இதனால் அம்மாநிலத்தில் சிறைக்கைதிகள், சிறைத்துறை அதிகாரிகள் என கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,292 ஆக உள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 கைதிகள் உயிரிழந்துள்ளனர் என மாநில சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X