search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,822 பேருக்கு கொரோனா

    ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    அமராவதி:

    இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தாலும், குணமடைவோர் விகிதமும் அதிகரித்தே காணப்படுவது நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபாடில்ல. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,66,586-ஆக உயர்ந்துள்ளது.

    ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 63 பேர் உயிரிழந்தநிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 1,537 ஆக உள்ளது.   கடந்த 24 மணி நேரத்தில் 5,786 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் தொற்றிலிருந்து 88,672 பேர் குணமடைந்து சென்றுள்ளதாக  ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  தற்போது 76,377 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×