search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்
    X
    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்

    ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

    ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 7வது நாளாக அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
    ஸ்ரீநகர்:
     
    ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 7-வது நாளாக அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெண்டார் செக்டாரில் இன்று இரவு 10 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. பாகிஸ்தான் தொடர்ந்து 7-வது நாளாக எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
    Next Story
    ×