search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய தேர்தல் ஆணையம்
    X
    இந்திய தேர்தல் ஆணையம்

    தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்த முடிவு

    நாடு முழுவதும் காலியாக உள்ள பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக இன்று நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    தேர்தல் அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி சரியான நேரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×