என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் 18 பேருக்கு கொரோனா - வைரஸ் பரிசோதனை செய்து கொண்ட பகத் சிங் கோஷ்யாரி
Byமாலை மலர்12 July 2020 11:51 AM GMT (Updated: 12 July 2020 11:57 AM GMT)
மகாராஷ்டிரா மாநில ஆளுநர் மாளிகையில் ஊழியர்கள் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
மும்பை:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் தான் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
அம்மாநிலத்தில் இதுவரை 2 லட்சத்து 46 ஆயிரத்து 600 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 99 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பரவியவர்களில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 985 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், மகாரஷ்டிராவில் சிவசேனா தலைமையினான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும், அம்மாநில ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் பணியாற்றிவந்த 18 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, வைரஸ் உறுதி செய்யப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் மாளிகை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அலுவலக ஊழியர்கள் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பரவவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து கோஷ்யாரி கூறுகையில், ’நான் பூரண உடல் நலத்துடன் உள்ளேன். மேலும், நான் என்னை சுய தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை. நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனையின் முடிவில் எனக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது. கொரோனா தொடர்பான அறிகுறிகளும் எனக்கு இல்லை’ என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X