search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஜித்பவார்
    X
    அஜித்பவார்

    அம்பேத்கர் வீடு மீது தாக்குதல்: துணை முதல்-மந்திரி அஜித்பவார் கண்டனம்

    மும்பை தாதரில் சட்டமேதை அம்பேத்கரின் வீடு மீது நடந்த தாக்குதலுக்கு துணை முதல்-மந்திரி அஜித்பவார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    மும்பை :

    மும்பை தாதரில் சட்டமேதை அம்பேத்கரின் வீடு மீது நடந்த தாக்குதலுக்கு துணை முதல்-மந்திரி அஜித்பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தீய நோக்கத்துடன் சமூக விரோத சக்திகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளன. இந்த சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தை மாநில அரசு தீவிரமாக கவனிக்கிறது. போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிய விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    அவர்களை விரைவில் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நேரத்தில் மக்கள் அமைதியையும், ஒற்றுமையையும் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×