என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பரிசோதனையை அதிகரிக்காவிட்டால் ஆபத்து: தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை
Byமாலை மலர்25 Jun 2020 3:55 AM GMT (Updated: 25 Jun 2020 3:55 AM GMT)
மகாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால் ஆபத்து தான் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்துள்ளார்.
புனே :
மகாராஷ்டிராவில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் புனே மற்றும் பிம்பிரிசிஞ்ச்வாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புனேயில் கொரோனா பரிசோதனை குறைவாக உள்ளது. கொரோனா பரிசோதனைகளை புறக்கணிப்பது புனே நகரத்துக்கு ஆபத்தானது. மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி நாள் ஒன்றுக்கு 38 ஆயிரம் பரிசோதனைகள் செய்ய வேண்டும். ஆனால் 14 ஆயிரம் பரிசோதனைகள் தான் செய்யப்படுகிறது. மும்பையில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை பரிசோதனை செய்யப்பட வேண்டும். ஆனால் 4 ஆயிரம் பரிசோதனைகள் தான் செய்யப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது என நான் நினைக்கிறேன்.
புனேயில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 12 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களில் இது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாம் சோதனைகளை அதிகப்படுத்தினால், கூடுதலான நோயாளிகளை கண்டறிந்து தனிமைப்படுத்தலாம். நோய் பரவலையும் கட்டுப்படுத்த முடியும். கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்புகளையும் குறைக்க முடியும்.
மந்திரிகள் மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லை. மந்திரிகளுக்கும், நிர்வாகத்திற்கு இடையிலும் எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. அவர்களை ஒருங்கிணைப்பது முதல்-மந்திரியின் பொறுப்பாகும். ஒருங்கிணைப்பு இல்லாவிட்டால் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் பின்னோக்கி செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் புனே மற்றும் பிம்பிரிசிஞ்ச்வாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புனேயில் கொரோனா பரிசோதனை குறைவாக உள்ளது. கொரோனா பரிசோதனைகளை புறக்கணிப்பது புனே நகரத்துக்கு ஆபத்தானது. மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி நாள் ஒன்றுக்கு 38 ஆயிரம் பரிசோதனைகள் செய்ய வேண்டும். ஆனால் 14 ஆயிரம் பரிசோதனைகள் தான் செய்யப்படுகிறது. மும்பையில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை பரிசோதனை செய்யப்பட வேண்டும். ஆனால் 4 ஆயிரம் பரிசோதனைகள் தான் செய்யப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது என நான் நினைக்கிறேன்.
புனேயில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 12 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களில் இது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாம் சோதனைகளை அதிகப்படுத்தினால், கூடுதலான நோயாளிகளை கண்டறிந்து தனிமைப்படுத்தலாம். நோய் பரவலையும் கட்டுப்படுத்த முடியும். கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்புகளையும் குறைக்க முடியும்.
மந்திரிகள் மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லை. மந்திரிகளுக்கும், நிர்வாகத்திற்கு இடையிலும் எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. அவர்களை ஒருங்கிணைப்பது முதல்-மந்திரியின் பொறுப்பாகும். ஒருங்கிணைப்பு இல்லாவிட்டால் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் பின்னோக்கி செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X