என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டில் இருந்தபடி யோகா தினத்தை அனுசரியுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
Byமாலை மலர்19 Jun 2020 1:59 AM GMT (Updated: 19 Jun 2020 1:59 AM GMT)
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் அனைவரும் வீடுகளில் இருந்தபடி யோகா தினத்தை அனுசரிக்க வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று 2015ம் ஆண்டு ஐ.நா. ஜூன் 21ந் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அதன்படி 6 வது சர்வதேச யோகா தினம் வருகிற 21ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இந்தநிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் அனைவரும் வீடுகளில் இருந்தபடி யோகா தினத்தை அனுசரிக்க வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் “தொற்றுநோயால் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம், ஆனால் நமது உற்சாகம் அல்ல. இந்த ஆண்டு யோகா தினத்தை வீடுகளிலிருந்து அனுசரிப்போம். குடும்பத்தினருடன் சேர்ந்து யோகா செய்வோம்” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று 2015ம் ஆண்டு ஐ.நா. ஜூன் 21ந் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அதன்படி 6 வது சர்வதேச யோகா தினம் வருகிற 21ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இந்தநிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் அனைவரும் வீடுகளில் இருந்தபடி யோகா தினத்தை அனுசரிக்க வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் “தொற்றுநோயால் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம், ஆனால் நமது உற்சாகம் அல்ல. இந்த ஆண்டு யோகா தினத்தை வீடுகளிலிருந்து அனுசரிப்போம். குடும்பத்தினருடன் சேர்ந்து யோகா செய்வோம்” என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X