என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா
Byமாலை மலர்15 Jun 2020 8:01 PM GMT (Updated: 15 Jun 2020 8:01 PM GMT)
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்:
உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் இந்த வைரசின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது.
இந்த இக்கட்டான நிலையில் மருத்துவத்துறையினர், காவல் துறையினர், ஊடகத்துறையினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு துறையினர் மக்களுக்கு போதிய உதவிகளை செய்து வருகின்றனர்.
அவ்வாறு களத்தில் நின்று பணிகளை மேற்கொண்டு வரும் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்திலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, அம்மாநிலத்தில் 5 ஆயிரத்து 193 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜன்கான் தொகுதி எம்.எல்.ஏ. யாதகிரி ரெட்டிக்கும், நிசாமுதின் ரூரல் தொகுதி எம்.எல்.ஏ. பாஜிரெட்டி கோவர்தனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், தெலுங்கானா ராஷ்டிய சமிதி கட்சியை சேர்ந்தவரும் நிசாமுதின் அர்பன் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கணேஷ் குப்தாவுக்கு வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இவர் ஏற்கனவே வைரஸ் உறுதி செய்யப்பட்ட எம்.எல்.ஏ. பாஜிரெட்டியுடன் தொடர்பில் இருந்துள்ளார். தொகுதி சார்ந்த பணிகளில் இருவரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர். இதனால் தான் கணேஷ் குப்தாவுக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்ட அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெலுங்கானா ராஷ்டிய சமிதி கட்சியை சார்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X