என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமைதியையும், நட்பையுமே இந்தியா விரும்புகிறது: மத்திய மந்திரி நிதின் கட்காரி
Byமாலை மலர்15 Jun 2020 3:02 AM GMT (Updated: 15 Jun 2020 3:02 AM GMT)
சீனா அல்லது பாகிஸ்தானின் நிலப்பகுதி இந்தியாவுக்கு வேண்டாம் எனவும், அமைதியும், நட்பும் மட்டுமே தேவை என்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி உறுதிபட தெரிவித்தார்.
ஆமதாபாத் :
லடாக் எல்லையில் இந்தியா-சீனா படைகள் இடையே சமீபத்தில் நடந்த மோதல் இரு நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியது. அங்கு தற்போதுதான் படிப்படியாக நிலைமை சீரடைந்து வருகிறது.
இந்த நிலையில் அண்டை நாடுகளின் நிலப்பகுதிகள் இந்தியாவுக்கு வேண்டாம் என மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார். குஜராத் மாநில பா.ஜனதா சார்பில் நடத்தப்பட்ட ‘ஜன் சம்வாத்’ பேரணியில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மோடி அரசின் இரண்டாவது ஆட்சியின் முதல் ஆண்டில் நாட்டின் உள்ளேயும், வெளியேயும் அமைதியை கொண்டு வந்துள்ளோம். நாட்டுக்கு உள்ளே மாவோயிஸ்டு பிரச்சினையை கிட்டத்தட்ட வெற்றி கொண்டுள்ளோம். அதைப்போல பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதமும் முறியடிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் ஒரு எல்லையில் பாகிஸ்தானும் மறு எல்லையில் சீனாவும் உள்ளன. நாங்கள் விரும்புவது அமைதியும், அகிம்சையுமே ஆகும். ஆக்கிரமிப்பு செயல்கள் மூலம் இந்தியாவை வலுவான நாடாக்க மாட்டோம். அமைதி ஏற்படுத்துவதில் வலிமையான நாடு என்ற நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறோம்.
பாகிஸ்தானுடனான 1971-ம் ஆண்டு போர் வெற்றிக்குப்பின் வங்காளதேசத்தில் முஜிபுர் ரகுமானை பிரதமராக்கினோம். எங்கள் படைகளும் அங்கிருந்து தாயகம் திரும்பின. பூடான், வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளின் நிலத்தை அபகரிக்க இந்தியா ஒருபோதும் முயற்சிக்கவில்லை. ஒரு அங்குல நிலத்தை கூட நாங்கள் எடுக்கவில்லை.அதைப்போலவே சீனாவோ அல்லது பாகிஸ்தானோ, அவர்களின் நிலப்பகுதி இந்தியாவுக்கு வேண்டாம். மாறாக அமைதி, நட்பு, அன்பு, இணைந்த செயல்பாடு ஆகியவற்றையே நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
கொரோனா வைரஸ் பரவல் குறித்து கட்காரி கூறுகையில், ‘இந்த நெருக்கடி நீண்ட காலம் நீடிக்காது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். நமது நாடும் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது. எனக்கு கிடைத்த தகவல்படி, நாம் விரைவில் தடுப்பூசியை உருவாக்க முடியும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். அப்படி நாம் உருவாக்கினால் இந்த நெருக்கடி குறித்து கவலைப்பட வேண்டாம்’ என்று தெரிவித்தார்.
லடாக் எல்லையில் இந்தியா-சீனா படைகள் இடையே சமீபத்தில் நடந்த மோதல் இரு நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியது. அங்கு தற்போதுதான் படிப்படியாக நிலைமை சீரடைந்து வருகிறது.
இந்த நிலையில் அண்டை நாடுகளின் நிலப்பகுதிகள் இந்தியாவுக்கு வேண்டாம் என மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார். குஜராத் மாநில பா.ஜனதா சார்பில் நடத்தப்பட்ட ‘ஜன் சம்வாத்’ பேரணியில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மோடி அரசின் இரண்டாவது ஆட்சியின் முதல் ஆண்டில் நாட்டின் உள்ளேயும், வெளியேயும் அமைதியை கொண்டு வந்துள்ளோம். நாட்டுக்கு உள்ளே மாவோயிஸ்டு பிரச்சினையை கிட்டத்தட்ட வெற்றி கொண்டுள்ளோம். அதைப்போல பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதமும் முறியடிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் ஒரு எல்லையில் பாகிஸ்தானும் மறு எல்லையில் சீனாவும் உள்ளன. நாங்கள் விரும்புவது அமைதியும், அகிம்சையுமே ஆகும். ஆக்கிரமிப்பு செயல்கள் மூலம் இந்தியாவை வலுவான நாடாக்க மாட்டோம். அமைதி ஏற்படுத்துவதில் வலிமையான நாடு என்ற நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறோம்.
பாகிஸ்தானுடனான 1971-ம் ஆண்டு போர் வெற்றிக்குப்பின் வங்காளதேசத்தில் முஜிபுர் ரகுமானை பிரதமராக்கினோம். எங்கள் படைகளும் அங்கிருந்து தாயகம் திரும்பின. பூடான், வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளின் நிலத்தை அபகரிக்க இந்தியா ஒருபோதும் முயற்சிக்கவில்லை. ஒரு அங்குல நிலத்தை கூட நாங்கள் எடுக்கவில்லை.அதைப்போலவே சீனாவோ அல்லது பாகிஸ்தானோ, அவர்களின் நிலப்பகுதி இந்தியாவுக்கு வேண்டாம். மாறாக அமைதி, நட்பு, அன்பு, இணைந்த செயல்பாடு ஆகியவற்றையே நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
கொரோனா வைரஸ் பரவல் குறித்து கட்காரி கூறுகையில், ‘இந்த நெருக்கடி நீண்ட காலம் நீடிக்காது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். நமது நாடும் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது. எனக்கு கிடைத்த தகவல்படி, நாம் விரைவில் தடுப்பூசியை உருவாக்க முடியும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். அப்படி நாம் உருவாக்கினால் இந்த நெருக்கடி குறித்து கவலைப்பட வேண்டாம்’ என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X