search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (பழைய படம்)
    X
    கொரோனா பரிசோதனை (பழைய படம்)

    மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 2,287 பேருக்கு கொரோனா பாதிப்பு: 103 பேர் பலி

    மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 2,287 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 103 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.

    இன்று ஒரே நாளில் 2,287 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,300 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று ஒரே நாளில் 103 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,225 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர்களின் எண்ணிக்கை 31,333 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×