search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள் (பழைய படம்)
    X
    டெல்லியில் பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள் (பழைய படம்)

    மராட்டியத்தில் 70 ஆயிரத்தையும், டெல்லியில் 20 ஆயிரத்தையும் தாண்டிய கொரோனா பாதிப்பு

    மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 2361 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 70 ஆயிரத்து 13 ஆக உயர்ந்துள்ளது.
    இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    மகாராஷ்டிராவில் இன்று 2,361 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 70,013 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 76 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 2,362 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    டெல்லியில் இன்று புதிதாக 990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 20,834 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது.

    8,746 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 11,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு 1,295 பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×