என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கண்ணுக்கு தெரியாத எதிரியை நம் மருத்துவர்கள் வீழ்த்துவார்கள்- மோடி நம்பிக்கை
Byமாலை மலர்1 Jun 2020 6:22 AM GMT (Updated: 1 Jun 2020 6:22 AM GMT)
கொரோனா வைரஸ் ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கலாம், ஆனால் நமது மருத்துவ ஊழியர்கள் அதனை வீழ்த்துவார்கள் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு இன்று தொடங்கி உள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கலாம். ஆனால் நமது மருத்துவ ஊழியர்கள் வெல்ல முடியாதவர்கள். கண்ணுக்கு தெரியாத எதிரிக்கும், வெல்ல முடியாதவர்களுக்கும் இடையே நடக்கும் போரில் நமது மருத்துவ ஊழியர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்’ என நம்பிக்கை தெரிவித்தார்.
‘வரும் காலங்களில் இந்த பல்கலைக்கழகம் சிறப்பான புதிய உயரங்களை எட்டும் என நம்புகிறேன். உலகளாவிய தொற்றுநோய் மட்டும் இல்லாதிருந்தால், இந்த நாளில் நான் உங்களுடன் பெங்களூருவில் இருக்கவேண்டும் என விரும்பினேன்.
வைரஸ் பரவிய நேரத்தில், உலகமே நம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் விஞ்ஞான சமூகத்தை நம்பிக்கையுடனும் நன்றியுடனும் பார்க்கிறது. உங்களிடமிருந்து கவனிப்பு மற்றும் குணப்படுத்துதல் இரண்டையும் உலகம் எதிர்பார்க்கிறது’ என மோடி பேசினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு இன்று தொடங்கி உள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கலாம். ஆனால் நமது மருத்துவ ஊழியர்கள் வெல்ல முடியாதவர்கள். கண்ணுக்கு தெரியாத எதிரிக்கும், வெல்ல முடியாதவர்களுக்கும் இடையே நடக்கும் போரில் நமது மருத்துவ ஊழியர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்’ என நம்பிக்கை தெரிவித்தார்.
‘வரும் காலங்களில் இந்த பல்கலைக்கழகம் சிறப்பான புதிய உயரங்களை எட்டும் என நம்புகிறேன். உலகளாவிய தொற்றுநோய் மட்டும் இல்லாதிருந்தால், இந்த நாளில் நான் உங்களுடன் பெங்களூருவில் இருக்கவேண்டும் என விரும்பினேன்.
வைரஸ் பரவிய நேரத்தில், உலகமே நம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் விஞ்ஞான சமூகத்தை நம்பிக்கையுடனும் நன்றியுடனும் பார்க்கிறது. உங்களிடமிருந்து கவனிப்பு மற்றும் குணப்படுத்துதல் இரண்டையும் உலகம் எதிர்பார்க்கிறது’ என மோடி பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X