என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பையில் ராணுவம் குவிப்பா?: மகாரஷ்டிரா மாநில மந்திரி விளக்கம்
Byமாலை மலர்27 May 2020 12:06 PM GMT (Updated: 27 May 2020 12:06 PM GMT)
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மும்பை மற்றும் புனேயில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி வதந்தி என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை 54 ஆயிரத்து 758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பை மற்றும் புனேயில் மட்டும் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே மும்பை மற்றும் புனேயில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் மக்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும். இதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில் அந்த செய்தி வதந்தி என மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். மேலும், வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
இதுகுறித்து அனில் தேஷ்முக் கூறுகையில் ‘‘மும்பை மற்றும் புனேயில் ராணுவம் குவிக்கப்படுகிறது என்று வாட்ஸ்அப், மற்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக வேண்டுமென்றே வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
இது முற்றிலும் தவறானது. மகாராஷ்டிரா சைபர் கிரைம் மூலம் இதுபோன்று வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X