என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிரா மந்திரி அசோக் சவானுக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்26 May 2020 3:07 AM GMT (Updated: 26 May 2020 3:09 AM GMT)
மகாராஷ்டிரா மந்திரி அசோக் சவானுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மும்பை :
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொடிய கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. இ்ங்கு பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து உள்ளது. பொதுமக்கள் தவிர போலீசார், சுகாதார பணியாளர்கள், பெஸ்ட் ஊழியர்கள், மத்திய படை வீரர்கள் என பல தரப்பினரையும் தொற்று தாக்கி உள்ளது.
இந்தநிலையில் கடந்த மாத இறுதியில் மகாராஷ்டிரா மாநில வீட்டு வசதித்துறை மந்திரி ஜிதேந்திர அவாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.
இந்தநிலையில் மாநில பொதுப்பணித்துறை மந்திரியும், முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் சவான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரான இவர் நாந்தெட் மாவட்டத்தை சேர்ந்தவர்.
இவர் பணி நிமித்தமாக மும்பை-நாந்தெட் இடையே அடிக்கடி பயணித்து உள்ளார். அதன்படி சில நாட்களுக்கு முன் மும்பை வந்துள்ளார். அதன்பிறகு நாந்தெட் திரும்பிய அவர் கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதையடுத்து நடந்த பரிசோதனையில் மந்திரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது மந்திரி நாந்தெட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மராட்டியத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது அரசியல் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொடிய கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. இ்ங்கு பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து உள்ளது. பொதுமக்கள் தவிர போலீசார், சுகாதார பணியாளர்கள், பெஸ்ட் ஊழியர்கள், மத்திய படை வீரர்கள் என பல தரப்பினரையும் தொற்று தாக்கி உள்ளது.
இந்தநிலையில் கடந்த மாத இறுதியில் மகாராஷ்டிரா மாநில வீட்டு வசதித்துறை மந்திரி ஜிதேந்திர அவாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.
இந்தநிலையில் மாநில பொதுப்பணித்துறை மந்திரியும், முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் சவான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரான இவர் நாந்தெட் மாவட்டத்தை சேர்ந்தவர்.
இவர் பணி நிமித்தமாக மும்பை-நாந்தெட் இடையே அடிக்கடி பயணித்து உள்ளார். அதன்படி சில நாட்களுக்கு முன் மும்பை வந்துள்ளார். அதன்பிறகு நாந்தெட் திரும்பிய அவர் கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதையடுத்து நடந்த பரிசோதனையில் மந்திரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது மந்திரி நாந்தெட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மராட்டியத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது அரசியல் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X