search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியது
    X
    மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியது

    மகாராஷ்டிராவில் இன்று 2033 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது

    மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 2033 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது.
    இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று ஒரே நாளில் 2033 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதனால் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 058 ஆக உயர்ந்துள்ளது. 51 உயிரிழந்துள்ளதால் பலியோனோர் எண்ணிக்கை 1249 ஆக உயர்ந்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, தாராவி, நாக்பூர் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

    மும்பையில் மட்டும் 19,967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×