என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொதுவெளியில் புகையிலை மென்று துப்புவதை தடை செய்ய வேண்டும்- மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
Byமாலை மலர்11 April 2020 6:54 AM GMT (Updated: 11 April 2020 6:54 AM GMT)
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புகையிலை நுகர்வை தடை செய்ய வேண்டும் என மாநில அரசுகக்கு மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:
கொரோனா வைரசின் கோரத் தாண்டவத்தினால் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 239 பேர் உயிரிழந்துள்னர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தல், சமூக விலகல், முக கவசங்கள் அணிவது, வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்வது என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
சில பகுதிகளில் பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமலும், மாஸ்க் அணியாமல் நெருக்கமாக செல்வது போன்ற செயல்களால் கொரோனா வைரஸ் பரவல் 3-ம் கட்டத்திற்கு சென்றுவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புகையிலை நுகர்வை தடை செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது. பொது இடங்களில் புகையிலையை பயன்படுத்துவதையும், மென்று துப்புவதைவும் தடை செய்யும்படி அனைத்து மாநில அரசுகளையும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
‘மெல்லும் புகையிலை பொருட்கள், பான் மசாலா மற்றும் அர்கா நட் ஆகியவற்றை மெல்லுவதால் உமிழ்நீர் உற்பத்தி அதிகமாகும். அந்த எச்சிலை தொடர்ந்து துப்ப வேண்டியிருக்கும். இவ்வாறு பொது இடங்களில் துப்புவது கொரோனா வைரசின் பரவலை அதிகரிக்கும்’ என சுகாதாரத்துறை கூறி உள்ளது.
கொரோனா வைரசின் கோரத் தாண்டவத்தினால் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 239 பேர் உயிரிழந்துள்னர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தல், சமூக விலகல், முக கவசங்கள் அணிவது, வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்வது என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
சில பகுதிகளில் பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமலும், மாஸ்க் அணியாமல் நெருக்கமாக செல்வது போன்ற செயல்களால் கொரோனா வைரஸ் பரவல் 3-ம் கட்டத்திற்கு சென்றுவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புகையிலை நுகர்வை தடை செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது. பொது இடங்களில் புகையிலையை பயன்படுத்துவதையும், மென்று துப்புவதைவும் தடை செய்யும்படி அனைத்து மாநில அரசுகளையும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
‘மெல்லும் புகையிலை பொருட்கள், பான் மசாலா மற்றும் அர்கா நட் ஆகியவற்றை மெல்லுவதால் உமிழ்நீர் உற்பத்தி அதிகமாகும். அந்த எச்சிலை தொடர்ந்து துப்ப வேண்டியிருக்கும். இவ்வாறு பொது இடங்களில் துப்புவது கொரோனா வைரசின் பரவலை அதிகரிக்கும்’ என சுகாதாரத்துறை கூறி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X