search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக கவசம் அணிந்து செல்லும் மக்கள்
    X
    முக கவசம் அணிந்து செல்லும் மக்கள்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 834 ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசை ஒழிக்க முடியாமல் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன. உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

    இந்தியாவிலும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் தற்போது 2ம் நிலையில் உள்ள நிலையில், மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர். 66 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×